ஒரு முறை சொன்னாலே கற்பூரமாக பிடித்துக்கொள்கிறார் - காஜலை பாராட்டும் இயக்குநர்!!!

Friday,5th of April 2013
சென்னை::இயக்குநர்களிடம் நடிகைகள் பாராட்டு வாங்குவது என்று குதிரை கொம்பான விஷயம். அதுவும் தமிழ்ப் பெண் அல்லாத வெளி மாநில ஹீரோயின்கள் நிலை இன்னும் மோசம், மொழி சரியாக தெரியாமல் வசனத்தைப் தப்பு தப்பாக பேசி பல டேக்குகள் வாங்கி இயக்குநர்களை வெந்த நூடூல்ஸ் போல  ஆக்கிவிடுவார்கள்.

ஆனால், காஜல் அகர்வால் இவர்களுக்கெல்லாம் விதிவிளக்காக உள்ளார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ், தற்போது கார்த்தியை வைத்து ஆல்

இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகியப் பகுதிகளில் நடந்துமுடிந்துள்ளது. முதல் கட்டப்படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இயக்குநர் ராஜேஷ், படத்தைப் பற்றி கூறும் போது நடிகை காஜல் அகர்வாலை ரொம்பவே பாராட்டி பேசினார்.

கார்த்தியுடன் பணியாற்றுவது நல்ல அனுபவம். இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வாலின் நடிப்பைப் பார்த்து நானே வியந்து விட்டேன். அவரிடம் ஒரு டயலாக் சொல்லிவிட்டால் அதை அபப்டியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். நடிப்பில் அவர் காட்டும் அக்கறைதான் அவருக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளது. என்று காஜலைப் பாராட்டிய ராஜேஷ், விட்டால் அவருக்கு ஒரு பாராட்டு விழாவைக் கூட நடத்திவிடுவார் போலிருக்கிறது.
 
இன் ஆல் அழகு ராஜா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

Comments