சினிமா காதல் ஜோடிகள் காளஹஸ்திக்கு படை எடுப்பது ஏன்?!!!

Saturday,23rd of March 2013
சென்னை::திருமண தடை நீங்க காளஹஸ்திக்கு சினிமா நட்சத்திர ஜோடிகள் படை எடுக்கின்றனர். நட்சத்திர காதல் ஜோடிகள் தங்களது காதல், திருமணம் எந்த வித தடையும் இல்லாமல் நிறைவேறுவதற்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்கு படை எடுப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆனால் இதில் சில ஜோடிகளின் எண்ணம் கைகூடுகிறது. சில ஜோடிகள் பிரிந்தும் இருக்கின்றன. பிரபுதேவா-நயன்தாராவும் இணைபிரியாத காதல் ஜோடிகளாக பழகி வந்தனர். தங்களது காதல் எந்த தடையும் ஏற்படாமல் நிறைவேற காளஹஸ்தி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். வருடா வருடம் தனது சார்பில் பிரபு தேவா இக்கோயிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்து வருகிறார்.

நயன்தாரா தனிப்பட்ட முறையில் இக்கோயிலில் நாகதோஷ பரிகார பூஜையும் செய்தார். ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். தற்போது காதல் ஜோடியாக வலம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி சமீபத்தில் காளஹஸ்தி கோயிலுக்கு சென்று ராகு-கேது பூஜை செய்தனர். இதுபற்றி கோயில் நிர்வாகி ஒருவர் கூறும்போது,‘அனுஷ்கா இக்கோயிலுக்கு வருடம் தவறாமல் வருவார். ராகு கேது பரிகார பூஜையும் செய்தார். ராகவேந்திர லாரன்ஸும் தவறாமல் வரும் பக்தர். அவரும் ஒவ்வொரு வருடமும் கோயிலுக்கு ரூ. 1 லட்சம் தருகிறார். அதேபோல் ஸ்ரேயாவும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வார். இந்தியாவிலேயே ராகு கேதுக்கு உள்ள ஒரே கோயில் இதுதான். இதனால்தான் எல்லோரும் இங்கு வருகிறார்கள். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உடையவர்கள் இங்கு தவறாமல் வருகின்றனர்‘ என்றார்.

Comments