நயன்தாராவுடன் எனக்கு ஆழமான நட்பு உண்டு: ஆர்யா பரபரப்பு பேட்டி!!!

Saturday,30th of March 2013
சென்னை::நயன்தாராவுடன் எனக்கு ஆழமான நட்பு உண்டு என்றார் .ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி நடித்துள்ள படம் ‘சேட்டை’. தமன் இசை அமைத்துள்ளார். ஆர்.கண்ணன் டைரக்ஷன். யுடிவி தயாரிப்பு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்யா கூறியதாவது:இந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் சேட்டை. இந்தியில் ‘ஏ’ படமாக உருவானது. ஆபாச வசனங்கள் நிறைய இருந்தது. தமிழில் ‘ஏ’ வசனங்களை தவிர்த்து நம் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி இருக்கிறார் இயக்குனர் கண்ணன். தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் தந்துள்ளது. ஹீரோயின்கள் ஹன்சிகா, அஞ்சலி ஷூட்டிங் தொடங்கிய நேரத்தில் குண்டாக இருந்தார்கள். ஷூட்டிங் முடியும்போது ஒல்லியாகிவிட்டார்கள். படத்தில் அஞ்சலியுடன் லிப் டு லிப் கிஸ் சீன் இருந்தது. காட்சிக்கு அவசியம் என்பதால் படமாக்கினார்கள். உடன் நடித்த சந்தானம் உள்ளிட்ட அனைவரும் நிறைவாக நடித்திருக்கின்றனர்.‘நயன்தாராவுக்கு பிரியாணி கொடுத்தீர்களா? அவருடன் என்ன உறவு?’ என்று கேட்கிறார்கள். என் அம்மா பிரியாணி சூப்பராக செய்வார். நயன்தாராவுக்கு மட்டுமல்ல.. பல நடிகர், நடிகைகளுக்கு வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறேன். அதே நேரம், நயன்தாராவுடன் எனக்கு ஆழமான நட்பு இருக்கிறது.இவ்வாறு ஆர்யா கூறினார். பேட்டியின்போது யுடிவி தனஞ்செயன், இயக்குனர் ஆர்.கண்ணன். ஹன்சிகா, நாசர் அஞ்சலி உடனிருந்தனர்.

Comments