இயக்குநர் மகனின் காதலுக்கு நோ சொன்ன ஆண்ட்ரியா!!!

Saturday,30th of March 2013
சென்னை::சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல ஆண்ட்ரியா செல்லும் இடம் எல்லாம் ஒரே காதல் பரபரப்பு தான். செல்வராகவன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் காதல், என்று தமிழ் சினிமாவில் அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்தி வந்த ஆண்ட்ரியா தற்போது மலையாள சினிமாவிலும் காதல் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.

பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகன் பகதுடன், ஆண்ட்ரியா ஜோடி போட்டு நடித்தப் படம் 'அன்னையும் ரசூலும்'. இப்படத்தில் நடிக்கும்ப்போது ஆண்ட்ரியா மீது காதல் கொண்ட பகத், பத்திரிகை ஒன்றில் வெளிப்படையாகவே நான் ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஆண்ட்ரியாவோ இது சம்மந்தமாக மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்தார். இதனால் ஆண்ட்ரியாவும் பகத்தை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியாக, தற்போது இது தொடர்பாக ஆண்ட்ரியா முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து கூறிய ஆண்ட்ரியா, "நான் யாரையும் காதலிக்கவில்லை. என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. பகத் என்னை விரும்புவதாக கூறியுள்ளார். அது அவர் எண்ணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எதுவும் இல்லை. நான் அவரை காதலிக்க வில்லை. உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் எனக்கு இல்லை." என்று பகத்தின் காதலுக்கு நோ சொல்லிவிட்டார்.

Comments