அதிக சம்பளம் கேட்பது ஏன்? தமன்னா பதில்!!!

Wednesday,27th of March 2013
சென்னை::அதிக சம்பளம் கேட்பது ஏன்? என்பதற்கு பதில் அளித்தார் தமன்னா. நீண்டநாட்களுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கு
ம் தமன்னா, அதற்காக ஒன்றேகால் கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது இது பற்றி தமன்னா கூறியதாவது: தமிழில் அஜீத் ஜோடியாகவும், தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ரீனிவாசன் ஜோடியாகவும். இந்தியில் அக்ஷய்குமார் ஜோடியாகவும் நடிக்க உள்ளேன். தற்போது அஜய் தேவ்கனுடன் ‘ஹிம்மத்வாலா‘ இந்தி படத்தில் நடித்துள¢ளேன். இப்படம் நாளை மறுநாள் ரீலிஸ். ‘தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கினீர்களா?‘ என்கிறார்கள். எனக்கென ஒரு சம்பளம் நிர்ணயித்திருக்கிறேன். அதைத்தான் நான் கேட்கிறேன். அதற்கான தகுதி எனக்கு இருப்பதால் தயாரிப்பாளர்களும் தருகிறார்கள்.

ஒவ்வொரு நடிகரும், நடிகையும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப சம்பளம் பெறுகிறார்கள். தென்னிந்திய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோயின்கள் தங்களுடைய மார்க்கெட் குறைந்ததும் இந்திக்கு செல்கிறார்களே என்கிறார்கள். அது வருத்தம் தருவது மட்டுமல்ல நிஜமும் கூட. எந்தவொரு ஹீரோயினும் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது. உடல்ரீதியான மாற்றம், வயது காரணமாக முதிர்ச்சி தோன்றும். 5 வருடத்துக்கு முன் இருந்த எனது தோற்றத்துக்கும் இப்போதுள்ள தோற்றத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. எனது தொழிலை பொறுத்தவரை நடிப்புதான் முக்கியம். ஆனால் ரசிகர்கள் பெரும் பாலும் தோற்றத்துக்குத்தான் மயங்குகிறார்கள். ஹீரோக்கள் விஷயத்தில் இந்த பிரச்னை கிடையாது. ஒன்று மட்டும் நிச்சயம், நான் நடிக்கும்வரை ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன்.

Comments