யான்’ படப்பிடிப்பில் தங்கை துளசியுடன் கார்த்திகா!!!

Monday,18th of February 2013
சென்னை::பழைய நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் நடிக்க வந்துள்ளனர். கார்த்திகா “கோ” படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமாகி பிரபலமானார். பாரதிராஜா இயக்கும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

துளசி, 'கடல்" படத்தில் அறிமுகமானார். இப்படத்தை மணிரத்னம் இயக்கினார். தற்போது ‘யான்’ படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கிறார். ரவிகே.சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் ‘யான்’ படப்பிடிப்பு நடந்த அரங்குக்குள் கார்த்திகா திடீரென நுழைந்தார். அக்காவை பார்த்ததும் துளசி ஓடோடி போய் கட்டிப்பிடித்து வரவேற்றார். பின்னர் இருவரும் தனியாக உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து கார்த்திகா கூறும் போது, இருவரும் நடிக்க வந்த பிறகு வீட்டில் சந்திக்க முடியவில்லை. ‘யான்’ படப்பிடிப்பு அரங்குக்குள் சென்று என் தங்கையை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. என் டிசைனரை சந்திக்க போகும் வழியில்தான் எதிர்பாராமல் ‘யான்’ படப்பிடிப்பு அரங்கில் தங்கையை சந்தித்தேன். இருவருமே படப்பிடிப்பில் பிசியாகி விட்டோம்.

இவ்வாறு கூறினார்.

Comments