நயன்தாராவுக்கு ப்ரஷ்ஷரை ஏற்படுத்திய ஷீலா!!!


Monday,18th of February 2013
சென்னை::தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷீலோ. அதையடுத்து இளவட்டம், சீனாதானா 001, வேதா உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் படங்களின் படுதோல்வி அவரை ஆந்திராவுக்கு திருப்பி விட்டது. ஆந்திரா சொந்த மாநிலம் என்பதோடு, இவரது தாராள நடிப்புக்கு அங்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததால், தமிழை சுத்தமாக மறந்து விட்டு, அங்கு கவர்ச்சி நாயகியாக முன்னிலை வகித்தார் ஷீலா. அந்த சமயத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நயன்தாராவுக்கு இவருக்குமிடையேகூட கடுமையான கவர்ச்சிப்போட்டி நிலவியதாகவும் சொல்கிறார். அப்படி சில படவாய்ப்புகளை தனது கச்சிதமான உடல்கட்டை முன்வைத்து கைப்பற்றியிருக்கிறாராம் ஷீலா.

ஆனால் தற்போது திடுதிப்பென்று ஷீலாவின் மார்க்கெட் இறங்குமுகத்தில் உள்ளதாம். அதன்காரணமாக, மொத்த மார்க்கெட்டும் இறங்குவதற்கு முன்பு மீண்டும் தமிழில் சில படங்களை கைப்பற்றி விடுவோம் என்று சென்னையில் உள்ள தான் பிறந்து வளர்ந்த வீட்டில் மீண்டும் குடியேறியிருக்கிறார் ஷீலா. அதோடு, முன்பைவிட இப்போது சிறந்த கமர்சியல் கதாநாயகிக்குரிய அனைத்து தகுதிகளும் தன்னிடம் அளவுக்கதிகமாகவே உள்ளது என்பதை கோலிவுட் படாதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில், தனது கவர்ச்சி ஆல்பத்தையும் சுற்றலில் விட்டிருக்கிறார் நடிகை. குறிப்பாக, போட்டியில்லாத வாழ்க்கை போரடிக்கும் என்பதால், தான் கோலிவுட் கோதாவில் குதிக்கப்போவதை நயன்தாராவுக்கு தெரியப்படுத்தும் வகையில், அவரது அபிமானிகளிடம் இந்த தகவலை பாஸ் பண்ணி, அவருக்கு ப்ரஷ்ஷரை ஏற்றியுள்ளாராம் ஷீலா

Comments