கவர்ச்சிக்கு ரெடியானார் திரிஷா!!!

Sunday,10th of February 2013
சென்னை::திரையுலகிற்கு வந்து பத்து வருடங்களை கடந்த திரிஷா, தற்போது கவர்ச்சியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமர் படத்திற்குப் பிறகு திரிஷாவிடம் ஏகப்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதாம். அத்தனையும் இயக்குநர்களுக்கு சாதகமாகவே இருக்கிறதாம்.

திரிஷாவின் இந்த பத்து வருட சினிமா வாழ்க்கையில், இதுவரை அவருடைய அம்மா உமா தான் இயக்குநர்களிடன் கதையை கேட்டு ஓகே சொல்வாராம். ஆனால், தற்போது திரிஷாவே கதை கேட்க ஆரம்பித்திருக்கிறாராம். அதுமட்டும் இன்றி சமர் படத்தில் பாடல் காட்சியில் கவர்ச்சியாக தோன்றிய திரிஷா, இனி தனது மெல்லிய உடலுக்கு கவர்ச்சி கச்சிதமாக இருக்கும் என்று எண்ணி, கதை சொல்ல வரும் இயக்குநர்களிடன் தேவையான அளவுக்கு கவர்ச்சி காட்ட ரெடி என்று கூறுகிறாராம்.

இதனால், புதுமுகங்களை தேடி மும்பைக்கு படையெடுத்த பல இயக்குநர்கள், தற்போது திரிஷா வீட்டை நோக்கி செல்கிறார்களாம்

Comments