Friday,11th of January 2013

சென்னை::இந்த பொங்கல் பண்டிகைக்கு நடிகர் கார்த்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது. ஒன்று அவருடைய 'அலெக்ஸ் பாண்டியன்' திரைப்படத்தின் மூலம், மற்றொன்று அவருக்கு பிறந்திருக்கும் பெண் குழந்தையின் மூலம்.

நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கர்பமான ரஞ்சனிக்கு இன்று மாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ரஞ்சனிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

Comments