டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்க ஆட்சேபனை இல்லை" அமலா பால்!!!

Tuesday,22nd of January 2013
சென்னை::தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளிலும் பிஸியாக வலம் வரும் அமலா பால், நடித்த தெலுங்குப் படம் 'நாயக்' சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக ஆந்திராவில் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள அமலா பால், "டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்க எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை." என்று கூறியியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "சினிமாவில் எனக்கு நல்ல வேடங்கள் அமைகின்றன. இதனால் பாராட்டுகள் குவிகிறது. படவாய்ப்புகளும் வருகிறது. முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். தெலுங்கில் நடித்த “நாயக்” படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அப்படத்தில் ஒரு பாட்டுக்கு நான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நிஜத்தில் எனக்கு நடனம் ஆட தெரியாது. பழைய படமொன்றில் சிரஞ்சீவி, ராதா ஆடிய ஒரு பாடலை “நாயக்” படத்தில் ரீமிக்ஸ் செய்தனர். அந்த படத்தில் ராதா பிரமாதமாக ஆடி இருந்தார். அவரைபோல் கஷ்டப்பட்டு ஆடி முடித்தேன். பாராட்டுகள் கிடைக்கிறது. இருநாயகிகள் உள்ள படங்களில் நடிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை. எனது கேரக்டர் நன்றாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.

மற்ற நடிகைகள் மீது பொறாமை படமாட்டேன். பேராசையும் எனக்கு கிடையாது. இயக்குனர் கதை சொல்லும்போது எனது வேடம் பற்றி மட்டுமே கேட்பேன். எனக்கு நெருங்கிய தோழி காஜல்அகர்வால். “நாயக்” படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது.

தமிழ், தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். மூச்சுவிட கூட நேரம் இல்லை. அவ்வளவு பிசி. இந்திப் படங்களில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. தெலுங்கு கற்கிறேன். விரைவில் நானே தெலுங்கு படங்களில் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன்." என்றார்.

Comments