மணிரத்னத்துடன் மோதும் விக்ரம்: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!!!

Tuesday,22nd of January 2013
சென்னை::இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்தி, துளசி நாயர் நடித்துள்ள ‘கடல்’ படம் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், விக்ரம், ஜீவா நடிப்பில் இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட ‘டேவிட்’ படமும் பிப்ரவரி 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரே மிரட்டும் விதத்தில் இருந்தது. இப்படத்தின், தமிழ் பதிப்பை தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். எனவே, இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 1-ந் தேதி பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்களும் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக, வரும் ஜனவரி 25-ந் தேதி கமல் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments