ஜெயம்ரவி - ஜீவா இணையும் ‘தூக்குத் தண்டனை!!!

Thursday,17th of January 2013
சென்னை::இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை எடுத்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். தனது புதிய படத்தில் இரண்டு பெரிய கதாநாயகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

இதற்காக, தன்னுடைய ‘பேராண்மை’ படத்தில் நடித்த ‘ஜெயம்’ ரவியை இரு கதாநாயகர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக ஜீவாவை தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்திற்கு ‘தூக்குத் தண்டனை’ என்று பெயர் வைத்துள்ளார் ஜனநாதன்.

மார்ச் மாதத்தில் படத்தை துவங்க முடிவு செய்துள்ளாராம். 
1-11-12_findyour_INNER_468x60.gif

Comments