பொது மக்களுக்கு 'லட்டு' வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய சந்தானம்!!!

Monday,21st of January 2013
சென்னை::பிறந்தநாள் கொண்டாடும் காமெடி நடிகர் சந்தானம், பொது மக்களுக்கு லட்டு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

'புளு ஓசன் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் பி.சித்திரைச்செல்வன் தயாரிப்பில், திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் படம் 'தலைவன் '. பாஸ்-நிகிஷா படேல் நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி அருகே உள்ள கொடநாடு-மிலிட்டேன் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட சந்தானம், அங்கேயே தனது பிறந்தநாளையும் கொண்டாடினார்.

சந்தானத்தின் பிறந்தநாளுக்காக, 'தலைவன்' படப்பிடிப்புக் குழுவினர் 50 கிலோ கேக்கை வரவைத்தனர். காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்த சந்தானம் அந்த கேக்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். பிறகு அந்த கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், பிறகு ஏற்‌பா‌டு செ‌ய்‌தி‌ருந்‌த 1000 லட்‌டுகளை‌ மி‌லி‌ட்‌டே‌ன்‌ கி‌ரா‌ம மக்‌களுக்‌கு வழங்‌கி‌னா‌ர்‌. கி‌ரா‌ம மக்‌கள்‌ அவருக்‌கு உற்‌சா‌கத்‌துடன்‌ பி‌றந்‌த நா‌ள்‌ வா‌ழ்‌த்‌துக்‌களை‌ தெ‌ரி‌வி‌த்‌தனர்‌.

Comments