என்னால் படங்கள் தாமதமா? : சமந்தா கோபம்!!!

Thursday,13th of December 2012
சென்னை::என்னால் எந்த படமும் தாமதம் இல்லை. இந்த ஆண்டு எல்லா படத்தையும் முடித்துவிட்டேன் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடி‘ பட ஹீரோயின் சமந்தா. இந்த ஆண்டு அவருக்கு ‘நான் ஈ வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தோல் நோயால் பாதிக்கப்பட்டதால் அந்த படங்களிலிருந்து விலகினார். இதற்கிடையில் கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன்வசந்தம்‘ படத்தில் நடித்து வந்தார். தோல் நோய்க்கு சிகிச்சை எடுக்க சென்றதால் இப்பட ஷூட்டிங் பாதியில் நின்றது. சில தெலுங்கு படங்களின் ஷூட்டிங்கும் நின்றது. இது குறித்து சமந்தா கூறும்போது,‘தெலுங்கில் சீதம்மா வகிட்லே சிருமல்லே செட்டு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறேன்.

இதன் ஷூட்டிங் புனாவில் நடக்கிறது. ஏற்கனவே இதன் பட ஷூட்டிங் முடிந்த நிலையில் பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதுவும் முடிவடைய உள்ளது. இம்மாதம் 20ம் தேதியுடன் இந்த ஆண்டில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிடுவேன். புதிய படத்தின் ஷூட்டிங்கை 2013 புத்தாண்டில் தொடங்க உள்ளேன். ஆனால் என்னால் சில படங்கள் தாமதம¢ ஆனதாக சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. மருத்துவ சிகிச்சை காரணமாக 2 மாதம் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் நான் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குனர்கள் படமாக்கி முடித்துவிட்டனர். அதனால் என்னால் எந்த படமும் தாமதம் ஆகவில்லை’ என்றார்.

Comments