எனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி பிறந்தநாள் செய்தி!!!

Wednesday,12th of December 2012
சென்னை::ரஜினி பிறந்த நாளையொட்டி ரசிகர்களை இன்று சந்தித்ததால் நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார். அப்போது நிருபர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி நன்றி கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் ரஜினி கூறியதாவது:-

என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம். என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும் சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள்தான் முக்கியம். அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளவேண்டும்.

‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.

நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது வருவீர்கள் என்று கேட்டபோது, அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments