வித்யாபாலன் திருமண சடங்குகள் நாளை துவங்குகிறது: தமிழ் முறைப்படி 14-ந் தேதி முகூர்த்தம்!!!

Monday,10th of December 2012
சென்னை::'டர்டிபிக்சர்' படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்து பிரபலமானவர் வித்யாபாலன். இப்படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தமிழில் வெளியான 'உருமி' படத்திலும் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்.

வித்யாபாலனுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சித்தார்த் ராய் கபூர். தனியார் டி.வி.யொன்றில் உயர் அதிகாரியாக இருக்கிறார். வித்யாபாலன்-சித்தார்த் ராய் கபூர் திருமணம் வருகிற 14-ந் தேதி மும்பையில் நடக்கிறது. இதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து முகூர்த்த பட்டு புடவையை வித்யாபாலன் வாங்கியுள்ளார். புரோகிதர்களை வைத்து தமிழ் முறைப்படி திருமணம் நடக்கிறது.

திருமண சடங்குகள் நாளை துவங்குகின்றனர். முதலாவதாக மணப்பெண்ணுக்கு மருதாணியிடும் சங்கீத் வைபவம் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். இதில் வித்யாபாலன் நடித்த படங்களில் இருந்து ஹிட் பாடல்களை தேர்வு செய்து இசைக்குழுவினர் பாடுகிறார்கள். வித்யாபாலன் நண்பர்களுடன் நடனம் ஆடுகிறார்.

முகூர்த்தம் எளிமையாக நடத்தப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டெல்லி மற்றும் சென்னையில் நடத்த வித்யாபாலன் திட்டமிட்டுள்ளார். இதற்காக தனி அழைப்பிதழ் அச்சிட்டு நடிகர்-நடிகைகளுக்கு வழங்கியுள்ளார்.

Comments