10 ஆண்டுக்கு பிறகும் த்ரிஷா ஹீரோயினாக நீடிப்பது எப்படி? : இயக்குனர் விளக்கம்!!!

Thursday,6th of December 2012
சென்னை::பத்து ஆண்டுகளுக்கு பிறகும் த்ரிஷா ஹீரோயினாக நீடிப்பது எப்படி? என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். ஜீவா ஜோடியாக த்ரிஷா நடிக்கும் படம் ‘என்றென் றும் புன்னகை. இப்படத்தை அஹமத் இயக்குகிறார். அவர் கூறியதாவது: திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நிலைத்திருப்பது என்பது அரிதான விஷயம். அந்த வகையில் த்ரிஷா திரையுலகுக்கு அறிமுகமாகி 10 வருடம் ஆகியும் இன்னும் ஹீரோயினாக நீடிக்கிறார். இப்படத்தை பொறுத்தவரை ஜீவா, த்ரிஷா ஜோடி நன்கு பொருந்தி இருக்கிறது.

அதற்கு காரணம் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மேலும் கவர்ச்சியில் த்ரிஷா கலக்கி இருக்கிறார். ரசிகர்கள் குறிப்பிட்ட ஒரு நடிகையை வருடக் கணக்கில் திரும்ப திரும்ப திரையில் பார்க்கும்போது சோர்வடைந்து விடுவார்கள். ஆனால் அது த்ரிஷா விஷயத்தில் இல்லை. இத்தனை வருடங்கள் கடந்தபிறகும் த்ரிஷா இன்னும் பொலிவுடன் இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வரவேற்பு தருகின்றனர். அழகு மட்டுமே இதற்கு காரணமில்லை. அவரது உழைப்பு, தொழில் மீதான நேர்மை போன்றவைதான். ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் இயக்குனர்களிடமும் அவருக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து தந்திருக்கிறது.

Comments