கோச்சடையான் படத்திற்காக டப்பிங் பேசும் தீபிகா படுகோனே!!!

Sunday,4th of November 2012
சென்னை::ரஜினியின் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படத்திற்கான டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக இதில் இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி ஜாக்கி ஷெராப், நாசர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படம் 3டியில் உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டப்பிங் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. இதின் அனைத்து மொழிகளிலும் ரஜினி சொந்த குரலில் டப்பிங் பேசப் போகிறாராம். அதேபோல நடிகை தீபிகா படுகோனேவும் ஜப்பானிய மொழி தவிர மற்ற மொழிகளில் சொந்தமாக டப்பிங் பேச இருக்கிறாரம்.

இதனால் தமிழ் தெரியாத தீபிகா, தமிழ் கற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Comments