பாலா - பாடகர்களுக்கு ம‌ரியாதை!!!

Sunday,25th of November 2012
சென்னை::அவன் இவன் படததிற்குப் பின்னர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் முதல்முறையாக அவர் ராஜா குடும்பத்தை விட்டு வெளியே வந்து ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இசைக்காக கை கோர்த்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர். வேதிகாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். உமா ரியாஸுக்கும் முக்கியப் பாத்திரம் தந்துள்ளாராம் பாலா.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. பாலாவின் குருவான இயக்குநர் பாலுமகேந்திரா முதல் ஆடியோ சிடியை வெளியிட அதை நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர். பாலாவின் முதல் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்தார், 2வது படத்தின் நாயகன் சூர்யா என்பது நினைவிருக்கலாம்.

அதர்வா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள பரதேசி டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்த விழா நடப்பதற்கு முன்பே அதில் பாடிய பாடர்களுக்கும், எழுதிய வைரமுத்துக்கும் சிறப்பான ம‌ரியாதை செய்திருக்கிறார் பாலா.

பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் பாடகர்களை குறிப்பிட்டு பாராட்டுவதோ, வாழ்த்துவதோ கிடையாது. மாறாக தனது இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் படத்தில் பாடியிருக்கும் அனைவ‌ரின் படங்களையும் ஓவியமாக வரைந்து இடம்பெறச் செய்திருக்கிறார் பாலா. அருகில் அவர்கள் பாடிய பாடல்களின் விவரம். இதேபோல் இசையமைத்த ‌ஜி.வி.பிரகாஷ், பாடல்கள் எழுதிய வைரமுத்து ஆகியோ‌ரின் ஓவியங்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

பாடல் வெளியீட்டு விழாக்களில் பாடகர்களுக்கு இனியாவது மற்றவர்களும் முக்கியத்துவம் தருவார்களா?

Comments