சீண்டினால் பொறுத்துக்கமாட்டேன் : திவ்யா கோபம்!!!

Tuesday,27th of November 2012
சென்னை::என்னை சீண்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றார் திவ்யா. இது குறித்து அவர் கூறியதாவது: கன்னடம், தமிழ் இரண்டு மொழியிலும் நடிக்கிறேன். தற்போது ‘தில் கா ராஜா கன்னட படத்தில் நடித்து வருகிறேன். ஜனவரியிலிருந்து ‘நீர் டோஸ், பிப்ரவரியிலிருந்து சிவ்ராஜ்குமார் படம், ஏப்ரல் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறேன். சொந்த படம் தயாரிக்க உள்ளேன். சரியாக ஸ்கிரிப்ட் கிடைத்தால் தொடங்குவேன். என்னை பொறுத்தவரை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. சில சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் எரிச்சல் ஏற்படுத்தும். அதை பொறுத்துக்கொள்வேன்.

திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. ‘பாய்பிரண்ட் பற்றி வெளிப்படையாக சொன்னது ஏன்? என்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. என்னைபற்றி ஆராய்வதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. அரசியலைப்பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் கட்சிக்காக எனது ஆதரவை தொடர்வேன். ‘அடிக்கடி பிரச்னைகளில் சிக்குவது ஏன்? என்கிறார்கள். எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எதிர்மறையாக சீண்டிப்பார்க்கும்போது அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிர்ப்பை காட்டுகிறேன்.

Comments