பட வெற்றிக்கு நான்தான் காரணம் என கூறும் ஹீரோ, இயக்குனர் மீது கே.வி. ஆனந்த் பாய்ச்சல்!!!

Tuesday,2nd of October 2012
சென்னை::பட வெற்றிக்கு நானே காரணம் என ஹீரோ, இயக்குனர் கூறினால், அவர்கள் தலையில் ஒன்று போடணும் என்றார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கும் படம் ‘மாற்றான். காஜல் அகர்வால் ஹீரோயின். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பு. கே.வி.ஆனந்த் டைரக்ஷன். அவர் கூறியதாவது: மாற்றான் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. இம்மாதம் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் 2 ரீல்களுக்கு ரீ ரிக்கார்டிங் செய்து தர வேண்டி உள்ளது. இந்தியில் அமிதாப், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு படம் வெற்றி அடைந்தால் அது தன்னால்தான் வெற்றி அடைந்தது என்று ஹீரோவோ, இயக்குனரோ கூறினால் அவர்கள் தலையில் ஒன்று போட வேண்டும். வெற்றிக்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள்தான். அவர்களின் உழைப்பை யாரும் மறக்க கூடாது. இப்படத்தில் அந்தளவுக்கு தொழில் நுட்பம் இடம்பெற்றிருக்கிறது.

ஒரு முறை விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இந்த படத்துக்கான கதை ஐடியா கிடைத்தது. இயக்குனர் ஷங்கரிடம் அதை கூறியுள்ளேன். இந்த கதையை உருவாக்கியபோது சூர்யாதான் ஹீரோ என முடிவு செய்தேன். சூர்யாவின் கேரியரில் இது முக்கிய படமாக இருக்கும். இவ்வாறு ஆனந்த் கூறினார்.

Comments