மர்ம தேசம் புகழ் இயக்குநர் நாகாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் 'அன்பா...அழகா...'!!!

Monday,8th of October 2012
சென்னை::'மறந்தென் மெய் மறந்தென்', 'சொல்லித் தரவா' ஆகியப் படங்களைத்  ஃபுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம சார்பில் தயாரித்து, இயக்கிய எஸ்.சிவராமன், மூன்றாவதாக தயாரிக்து இயக்கும் படம் 'அன்பா...அழகா...'. இப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஆகாஷ் பிரபு ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் பிரபல டிவி தொடரான 'மர்ம தேசம்' தொடரை இயக்கிய நாகாவின் மகன் ஆவார்.
ஆஸ்திரேலியாவில் பைலர் பயிற்சியை முடித்த ஆகாஷ், சினிமா ஆர்வத்தின் மூலம் தற்போது நடிகராக களம் இறங்கியிருக்கிறார். நாயகிகளாக ப்ரீத்தி ஷங்கர், லாவண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். புதுமுகம் ப்ரீத்தி பல் மருத்துவர் ஆவார். லாவண்யா, ஏற்கனவே பூவம்பட்டி, கலவரம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அன்பா அழகா சொன்னால் எந்தவித பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியும். நம் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு எத்தனையோ மதங்கள், மொழி, கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் எல்லாருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு இருந்ததனால்தான் இருப்பதால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.
இரு மதம் சார்ந்த குடும்பத்தினர் இப்படி அன்பாக அழகாக இருக்கிறார்கள். அங்கே தோன்றிய காதலால் ஒரு பிரச்சனை முளைக்கிறது. அப்போது தீர்த்துக் கொள்கிறார்களா என்பதுதான் 'அன்பா...அழகா...' படத்தின் கதை.
'இதுவரை ஓர் இளைஞனின் காதல் வெற்றிபெற 4 இளைஞர்கள் பாடுபடும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இப்படத்தில் ஒருத்தியின் காதல் ஜெயிக்க இன்னொரு பெண் உதவி செய்வதைப் பார்க்கலாம்' என்கிறார் இயக்குநர்.
'ஒரு குடிம்பத்தில் எல்லாரும் அன்பாக பற்றுதலோடு இருக்கும்போது யாரோ ஒருவர் சொல்வதை மட்டும் எல்லாருமே தட்டமாட்டார்கள். சொன்னால் கேட்பார்கள் அப்படி ஒருவன்தான் நம் நாயகன்.
இதில் இரு மதங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க நல்லவிதமாக படத்தில் காட்டப்படும் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி மதங்கள் கடந்த அன்பையும் அழகையும் சொல்லும்படி இருக்கும்' என்று கூறுகிற இயக்குநர். தனக்கு வாய்த்த மதங்களாக கடந்து மனம் கவர்ந்த நண்பர்கள்தான் இப்படம் எடுக்க சிந்திக்க வைத்தவர்கள்'என்றார்.
சிறுபாண்மை,பெருபாண்மை மத உணர்வு என்றெல்லாம் நம்முன் கூறுபோட நினைத்திட ஆயிரம் சதிகள் நடந்தாலும் நாம் இந்தியர் என்கிற உணர்வுதான் நம்மை நிம்மதியாக வாழ வைத்து இணைக்கிறது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகும்'அன்பா... அழகா...' படத்தின் ஒளிப்பதிவாளர் கவின் சுரேஷ். இவர் ஸ்டில் போட்டோ கிராபராக இருந்தவர். ஏராளமான விளம்பரப் படங்கள் எடுத்திருப்பவர்.
இசையமைபாளர் புதியவர் பெயர் அருள் முருகன் படத்தின் 5 பாடல்கள், 'வேணான்னு சொன்னடா' என்கிற ஒரு குத்துப்பாடலை சிம்பு பாடியதுடன் பாராட்டியுள்ளார். பாடல் பிடித்துப் போகவே சிம்பு பாடிக் கொடுத்துள்ளார்.
படத்தின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முக்கிய இடம் வகிக்கிறது. இதர்காக் சென்னையில் நடந்த ஊர்வலத்தை ஏராளமான மக்களோடு கலந்து படமாக்கியுள்ளார்.
ரெட் Mx. கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகை வெளிச்ச மின்றி கிடைக்கிற இயற்கை ஒளியில் காட்சிகள் துல்லியமாக பதிவாகியுள்ளது. யதார்த்த முயற்சி.
இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதை சென்னைதான் கதையின் தளம் என்றாலும் சென்னை தாண்டி திருச்சி,கடலூர் என்றும் சென்று காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளுக்கு டார்ஜிலிங்,கோவா செல்ல உள்ளார்கள்.
சென்னையில் பல இடங்களில் பின்புலத்தில் நகரும் மக்களையும் அறியாமல் அவர்களை இடம் பெற வைத்துப் படப்பிடிப்பு 'லைவ்' ஆக நடந்துள்ளது. படத்தில் செட் என்பதே இல்லை. இதில் இடம் பெறும் தெருக்களும் கூட உண்மையானவை. செயற்கைப் பூச்சு இல்லாதவை.
படம் தொடங்கும்முன் மொத்த படக்குழுவினருக்கும் 'புரிந்து கொள்ளுதல்' பயிற்சி அளித்து ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.
'வேணான்னு சொன்னாடா' சிம்பு பாடிய பாட்டு நிச்சயம் கலக்கும்' என்கிறார் இசையமைப்பாளர், அருள் முருகன்.
நடித்தவர்களில் பலர் புது முகங்கள், என்றாலும் அனைவருமே தங்களிடம் இயக்குநர் நட்டுடன் அணுகி ஊக்க மூட்டி வேலை வாங்கியதாக் கூறுகிறார்கள்.
படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பாடல்கள் மெலடி,குத்து,கிராமியம்,தத்துவம் என்று வகைக்கு ஒன்று உண்டு.
அன்பை சொல்லும் படமிது.அழகை பேசும் படமும் கூட எனவே வழக்கமான கதாநாயகனுக்குரிய செயற்கை திணிப்புகள் - கதாநாயகத்தனம் இதில் இருக்காது என்கிறார் இயக்குநர்.

Comments