பாலிவுட்டில் பரபரப்பு : பிரியங்காகேத்ரினா திடீர் மோதல்!!!

Friday,19th of October 2012
மும்பை::யாரிடம் முதலில் இயக்குனர் கதை சொன்னார் என்ற பிரச்னையில் பிரியங்கா, கேத்ரினாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் இந்தி படம் குண்டே. அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் ஹீரோக்கள். இதில் ஹீரோயினாக நடிப்பது யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. முதலில் இக்கதையை கேத்ரினாவிடம் இயக்குனர் சொன்னார். கதை கேட்டு பிடித்துவிடவே கால்ஷீட் பற்றி பிறகு பேசலாம் என்று கேத்ரினா கூறி இருந்தார். குறிப்பிட்ட மாதங்களில் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குனர் கேட்டார்.

ஆனால் அப்போது ஹிருத்திக் ரோஷன் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கி தந்திருப்பதாக கேத்ரினா கூறினார். இதையடுத்து மவுனமாக திரும்பிய அலி அப்பாஸ் நேராக பிரியங்கா சோப்ராவிடம் சென்று கதை கூறினார். அவருக்கு கதை பிடித்துவிடவே உடனடியாக கால்ஷீட் ஒதுக்கி தந்தார். அத்துடன், இப்படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் இயக்குனர் கேட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னை இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தற்போது அதை அட்ஜெட் செய்துவிட்டேன்.

எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார் பிரியங்கா. இதைக்கேட்டு கோபம் அடைந்தார் கேத்ரினா. குண்டே படத்தில் நடிக்க முதலில் என்னிடம்தான் இயக்குனர் கால்ஷீட் கேட்டார். என்னால் கால்ஷீட் ஒதுக்கி தர முடியாததால் அதில் நடிக்கவில்லை. ஆனால் தன்னிடம்தான் முதலில் கதையை சொன்னதுபோல் வேறு ஹீரோயின் (பிரியங்கா) சொல்கிறார். அதை ஏற்க முடியாது என கேத்ரினா பதிலடி தந்துள்ளார். யாரிடம் கதை முதலில் சொல்லப்பட்டது என்பதில் பிரியங்கா, கேத்ரினாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments