சசிகுமார் இயக்கத்தில் நடிக்க முடிவா?: சூர்யா பேட்டி!!!

Sunday,21st of October 2012
சென்னை::சசிகுமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments