சல்மான் கான் வீட்டுக்கு மிட்நைட்டில் போனது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்!!!

Tuesday,2nd of October 2012
மும்பை::சல்மான் கான் வீட்டுக்கு நள்ளிரவில் போனது பற்றி விளக்கம் அளித்தார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா வெளியேறிய புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி இருவரும் கருத்து சொல்லாமல் மவுனம் காத்தனர். இதையடுத்து இருவர் பற்றியும் கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது மவுனத்தை கலைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சல்மான் கானின் தங்கை அர்பிதாவும் நானும் கடந்த 7 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்படி செல்லும்போதுதான் யாரோ எங்களை போட்டோ எடுத்திருக்கிறார்கள். இந்த போட்டோவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கையாண்டு திருத்தம் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட புகைப்படம் எடுத்தபோது என்னுடன் சல்மான் அவரது குடும்பத்தினர் சுஹேல், அர்பாஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர். அதை தந்திரமாக அழித்து மறைத்திருக்கிறார்கள். இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட போட்டோவைத்தான் நாங்கள் இருவர் மட்டும் இருப்பதுபோல் பரப்பி வருகிறார்கள். நானும் சல்மானும் நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது, அவர்கள் அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

Comments