கவுதம் மேனனுடன் நெருக்கமா? சமந்தா பேட்டி!!!

Monday,29th of October 2012
சென்னை::நீதானே என் பொன் வசந்தம் மூலம் தமிழில் ரீ எண்ட்ரியாகிறார் சமந்தா தோல்வி வியாதி, கவுதம் மேனனுடன் காதல் என்ற சர்ச்சைகளை தாண்டி அளித்த மினி பேட்டி...

நீதானே என் பொன்வசந்தம் அனுபவம் எப்படி?

தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு ரொமாண்டிக் படங்களாக எனக்கு அமைந்தாலும் நீதானே என் பொன் வசந்தம் ஸ்பெஷலான படம். என்னோட வாழ்க்கையில வெவ்வேறு ஸ்டேஜ்கள்ல நடக்குற உணர்வுபூர்வமான விஷயங்கள்தான் படத்தோட ஹைலைட்டாக இருக்கும். நான் ஈ எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருந்தாலும் நீ.எ.பொ.வதான் எனக்கு ரீ எண்ட்ரியா அமையப்போகும் படம்.

ஜீவாவுடன் கெமிஸ்ட்ரி எப்படி?

மின்னலே மாதவன்-ரீமா சென் மாதிரி, காக்க காக்க சூர்யா-ஜோதிகா மாதிரி, வாரணம் ஆயிரம் சூர்யா-சமீரா மாதிரி, வி.தா.வா சிம்பு-த்ரிஷா மாதிரி இனி ஜீவா-சமந்தா ஜோடியும் பேசப்படும். இன்னிக்கு நீங்க பீச்சுல, ஈசியார்ல பார்க்குற காதல்ஜோடிய திரையில பார்க்கலாம்.

இளையராஜா மியூசிக் எப்படி?

தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக்கூட "சற்றுமுன்" பாடலை ராகத்தோட வரி பிசகாமல் பாடுவேன். அந்த அளவுக்கு அந்தப்பாட்டு என் பிளட்டுல கலந்துருக்கு. அனுபவிச்சு நடிச்சு, ரசிச்ச பாட்டு நிறைய இருக்கு. ராஜா சாரோட இசை சாம்ராஜ்யம்தான் படமே.

அதெப்படி எல்லா ஹீரோயின்களும் கவுதம் படத்துல அழகாத் தெரியுறாங்க?

ஒரு ரகசியம் சொல்லட்டுமா, அவர் படத்துல நடிக்கிற ஹீரோயின்களுக்கு மேக் அப்பே இருக்காது. அவுங்களோட நிஜ அழகை திரையில கொண்டு வர்றதுதான் கவுதமோட ஸ்டைல். அவரோட அழகான டயலாக், லவ் மூவ்மெண்ட் இதெல்லாம் ஹீரோயின்களை இன்னும் அழகாக்கிடும்.

இயக்குனர் கவுதமுக்கு நீங்க ரொம்ப குளோஸாமே?

நீங்க என்ன அர்த்தத்துல கேக்குறீங்கன்ன தெரியல. ஆனா என்னோட பதில் இதுதான். இன்றைய இளைஞர்களை அப்படியே பிரதிபலிக்குற ஒரே இயக்குனர் அவர்தான். அதனால அவருக்கு நான் யூத் என்சைக்ளோபீடியான்னு செல்லப் பெயர் வச்சிருக்கேன்.,

சமர்த்தா சமாளிக்றீங்க சமந்தா...

Comments