நடிகர் கார்த்தி மனைவி ரஞ்சனி கர்ப்பம்?!!!

Monday,22nd of October 2012
சென்னை::நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தையை குடும்பத்தினர் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். கார்த்தி - ரஞ்சனி திருமணம் கடந்த வருடம் ஜூலை மாதம் கோவையில் நடந்தது.

திருமணத்துக்கு பின் ரஞ்சனி கணவருடன் படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்பு சாலக்குடியில் நடந்தது. கார்த்தி பிறந்த நாளையொட்டி அந்த படப்பிடிப்புக்கு சென்றார். அங்கு சுவையான பிரியாணி சமைத்து கார்த்திக்கும் படம் பிடிப்பு குழுவினருக்கும் பரிமாறினார். ரஞ்சனியின் சொந்த ஊர் கோவை. திருமணத்துக்கு பிறகு சென்னை வந்து விட்டார்.

ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர். விரைவில் பிரசவம் இருக்கும் என்று ஆஸ்பத்திரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Comments