யுவனையும் செல்வாவையும் இணைத்த சிம்பு!!!

Friday,12th of October 2012
சென்னை::சமீபகாலமாக பிரிந்திருந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குநர் செல்வராகவனும் மீண்டும் ஒரு புதுப்படத்தில் இணையப் போகிறார்கள். இவர்களுடைய இந்த இணைப்புக்கு ஃபெவிகால் தடவியிருக்கிறார் நடிகர் சிம்பு.

'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' என தொடர்ந்து இணைந்து பணியாற்றிய இயக்குநர் செல்வராகவனும், இசையமைப்பாளர் யுவனும் சூப்பர் ஹிட் பாடல்களையும், படங்களையும் கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து செல்வா, தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' ஆகியப் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரை இசையமைக்க வைத்தார்.

இந்தப் படங்களும், பாடல்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் செல்வராகவன் தற்போது இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார். இப்படத்தின் மூலம் மீண்டும் யுவன் சங்கர் ராஜாவை செல்வாவுடன் இணைத்து வைக்க முயற்சி செய்த சிம்பு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆம், செல்வராகவன் இயக்கும் அடுத்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Comments