முத்தகாட்சி படங்கள் வெளியானதால் எரிச்சல்: அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா!!!

Wednesday,17th of October 2012
சென்னை::தனுசின் ‘3’ படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலை வெறி பாடல் ஹிட்டானதால் அனிருத் பிரபலமானார்.

இந்த நிலையில் அனிருத்தும் ஆண்ட்ரீயாவும் நெருக்கமாக முத்தமிடும் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இருவரும் உதட்டுடன் உதடு முத்தமிட்டு இருந்தனர்.

அனிருத்தைவிட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். விருந்து நிகழ்ச்சியொன்றில் சக நடிகர் ஒருவர் இந்த முத்த காட்சி படங்களை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது. இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. முத்தகாட்சி படங்கள் வெளியானதால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அனிருத் சென்னையில் இரு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் நெருங்கிய நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஜெய், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா, லட்சுமி மஞ்சு, சவுந்தர்யா, சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்களும் பங்கேற்றார்கள். அனிருத் ‘கேக்’ வெட்டினர். பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இதில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் மேல் கோபமாக இருப்பதாகவும் எனவே விருந்துக்கு அவர் வரவில்லை என்றும் கூறப்பட்டது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments