அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது? விஜய் வட்டாரத்தில் குழப்பம் நீடிக்கிறது!!!

Thursday,25th of October 2012
சென்னை::துப்பாக்கி படத்தில் விஜய் நடித்து வந்தபோது, அடுத்தபடியாக கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர், படத்தின் கதையையே சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததால் அப்படத்திலிருந்து விலகினார் விஜய். அதனால் அதற்கடுத்தபடியாக விஜய்யை இயக்கயிருந்த ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார் நடிகர் விஜய். இதெல்லாம் தாண்டவம் படம் வெளியாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவுகள்.

ஆனால் இப்போது தாண்டவம் தோல்வியடைந்து விட்டதால் ஏ.எல்.விஜய் மீது விஜய் வட்டாரத்தில் அதிருப்தியான சூழல் நிலவுகிறது. அவரை நம்பி இறங்கலாமா?வேண்டாமா? என்ற குழப்பததில் இருக்கிறார்களாம். இந்த நிலையில், விஜய்யைக்கொண்டு பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும போன்ற படங்களை தயாரித்த ஆர்.பி.செளத்ரிக்கு மீண்டும் விஜய் கால்சீட் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நேசன் என்ற புதுமுக இயக்குனர்கள் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

Comments