வீட்டு கதவை தட்டி யாரும் வாய்ப்பு தரவில்லை : விஜயலட்சுமி வருத்தம்!!!

Sunday,21st of October 2012
சென்னை::வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி கூறியது: ‘சென்னை 28’ படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன்.

படம் வெற்றி பெற்று பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், என் வீட்டு கதவை தட்டி யாராவது வாய்ப்பு தரட்டும்; நடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். அது என்னை ஏமாற்றிவிட்டது. இதெல்லாம் நான் செய்த தவறு என்று இப்போதுதான் உணர்கிறேன். ‘அஞ்சாதே’, ‘அதே நேரம் அதே இடம்’ என ஒரு சில படங்களில் நடித்தேன். சில படங்களை தேர்வு செய்யும்போது தவறாக கணித்ததும் நான் செய்த மற்றொரு தவறு. இப்போது புதுமுகம்போல் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டேன்.

சி.எஸ்.ஆனந்தன் இயக்கும் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை நான் தவறவிட விரும்பவில்லை. இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இதில் வெற்றி பெறுவேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.

Comments