விஜய் மில்டன் இயக்கத்தில் பசங்க பார்ட்-2 விரைவில் தயாராகிறது!!!

Friday,19th of October 2012
சென்னை::பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன். தமிழில் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேலுவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர் தான். காதல் படம் தொடங்கி, சமீபத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படம் வரைக்கு இவர்களது வெற்றி கூட்டணி தொடர்ந்தது. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் மில்டன் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்துள்ளார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தையும் இயக்கியவர். இப்போது தன்னுடைய சொந்த தயாரிப்பில் பசங்க படத்தின் இரண்டாம் பாகமாக பசங்க பார்ட்-2 வை இயக்கி, தயாரிக்க உள்ளார். பசங்க படத்தின் டைரக்டர் பாண்டியராஜன் இந்தபடத்திற்கு வசனம் எழுத உள்ளார். பசங்க பார்ட்-2 படத்துக்காக சமீபத்தில் பசங்க படத்தில் நடித்த அதே கேரக்டர்களை வைத்து டெஸ்ட் ஷூட்டு எடுத்துள்ளார். அவர்களும் சிறப்பாக நடிக்க மில்டனுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணியுள்ளார்.

Comments