நடிகர்களுடன் இணைத்து என்னைப் பற்றி கிசு கிசு எழுதினால் கேஸ் போடுவேன் - அசின் மிரட்டல்!!!

Tuesday,11th of September 2012
சென்னை::நடிகர்களுடன் இணைத்து என்னைப் பற்றி கிசு கிசு எழுதினால் கேஸ் போடுவேன், என மிரட்ட ஆரம்பித்துள்ளார் நடிகை அசின்.

பாலிவுட்டும் கிசுகிசுவும் பிரிக்க முடியாதது. எப்பேர்ப்பட்ட நடிகையாக இருந்தாலும் மும்பை பத்திரிகைகளிடம் அவலாக சிக்கி அந்து வெந்து போவது தொடர்கிறது. அதற்கேற்பத்தான் நடிகைகளின் வாழ்க்கை முறையும் அங்குள்ளது.

தமிழில் நடித்த வரை மீடியாவில் நல்ல பெயரோடு இருந்த அசின், மும்பை போனதும் படத்துக்கொரு நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

ஆமீர்கானுடன் ரகசிய உறவு, சல்மான்கான் வீடு வாங்கிக் கொடுத்தார், சல்மான் படுக்கையறையில் இருந்தார் என்றெல்லாம் தொடர்கின்றன செய்திகள். ஷாரூக்குடனும் இணைத்து கிசுகிசு வந்துவிட்டது.

இப்போது மீண்டும் சல்மான்கானுடன். இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அசின் செம டென்ஷனாகி மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

அந்த மிரட்டலின் சுருக்கம் இது!

"நிறைய நடிகர்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்களை தொடர்ந்து எழுதி வருகிறார்கள், இதை என்னால் சகிக்கவே முடியவில்லை. நானும் குடும்பப் பெண்தான். நடிகர்களுடன் இதுபோல் ஒன்றாக சேர்ந்து வாழ நான் நினைத்து இருந்தால் சினிமாவுக்கு வந்துதான் அதை செய்ய வேண்டும் என்று இல்லை.

இனி இப்படி கிசுகிசு பரப்பினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன். கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்!"

அய்யய்யோ பயமா இருக்கே!

Comments