கோடம்பாக்கத்தில் கோலோச்ச தயாரான இசையமைப்பாளர்!!!

Saturday, 29th of September 2012
சென்னை::லவ்டுடே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சிவா, அப்படத்தை தொடர்ந்து 'பூமகள் ஊர்வலம்', 'அற்புதம்', 'காதல் சுகமானதே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றிகொடி நாட்டிய சிவா, தெலுங்கு சினிமாவிலும், இந்தி சினிமாவிலும் தன் இசை சாம்ராஜ்யத்தை விரிய செய்ததுடன், அமெரிக்காவில் உள்ள வெர்ஜன் ரெக்கார்டிங் கம்பெனியின் ஆல்பம் தயாரிப்புக்காக கீ-போர்டிஷ்ட்டாகவும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இப்படி உலகம் முழுவதும் பறந்துகொண்டிருந்த இவரை தமிழ் சினிமா மீண்டும் கோடம்பாக்கத்திற்கு அழைத்துகொண்டு வந்திருக்கிறது.

ராட்டினம்' படத்தின் ஜோடிகள் லகுபரன் - சுவாதி மீண்டும் இணைந்து நடிக்கும் 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்திற்காக சிவா இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இனி, தமிழ் சினிமாவில் முழுமையாக ஈடுபட்டு பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இவர் தனது சொந்த ஊரான சென்னையிலேயே செட்டிலாகி, இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்திற்காக பாடாலாசிரியர்கள் சினேகன், விவேகா ஆகியோரின் வரிகளில் ஐந்து பாடல்களை உருவாக்கியிருக்கும் இவர், அவற்றை இந்த ஆண்டின் ஹிட் பாடல்களாக தரும் முடிவில் வெகு ஜோராக உழைத்து வருகிறார்.

கூடவே சிவா என்ற தனது பெயரை ஹரிஹரன் என்று மாற்றி வைத்துகொண்டிருக்கிறார். (ஹரிஹரன் என்பது சிவாவின் மூத்த மகனின் பெயர்) இதுநாள் வரை தனது பெயரில் சிவனை வைத்துகொண்டிருந்த இவர், தற்போது ஹரியையும் சேர்த்துகொண்ட, இசையமைப்பாளர் ஹரிஹரன், இனி தமிழ் ரசிகர்களுக்காக பல ஹிட் பாடல்களை உருவாக்கப் போகிறார்.

Comments