ஆபாசத்தின் உச்சத்திற்குப் போனார் ஷெர்லின்... சுய இன்பப் படத்தை வெளியிட்டார்!!!

Tuesday,4th of September 2012
மும்பை::ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே போன்றோருக்கு அரசு உடனடியாக கடிவாளம் போட்டால் நல்லது. காரணம் இருவருமே எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில், ஷெர்லின் சோப்ரா, மிக மிக மோசமான முறையில் தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அதை பெரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. அத்தோடு நில்லாமல், ஒரு காலத்தில் தான் காசுக்காக பல ஆண்களுடன் இன்பம் அனுபவித்ததாகவும் சமீபத்தில் பெருமையுடன் கூறியிருந்தார். மேலும் சமீப காலமாக டிவிட்டரில் தனது ஆபாசப் படங்களையும் போட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் உச்சகட்ட ஆபாசமாக, தான் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் சுய இன்பம் அனுபவிப்பதை, மிக மிக நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். அதை அவர் எடுத்தாரா அல்லது யாரையாவது விட்டு எடுத்தாரா என்பது தெரியவில்லை.

மிகவும் மோசமான ஆபாசப் படமாக இது காட்சி தருகிறது. அத்தோடு ஆபாசமான கமெண்ட்டையும் வேறு போட்டுள்ளார் ஷெர்லின். அதில், ஆபாசம் என்பது கெட்டது அல்ல. அனைத்து கெட்டதுமே மனிதகுலத்தின் இருளான பகுதியிலிருந்துதான் வருகின்றன. பலரும் பல விஷயங்களை கெட்டது, தவறு என்று நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ள ஷெர்லின், மேலும் சில பிரசுரிக்க முடியாத வார்த்தைகளையும் கூடச் சேர்த்து எழுதியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது பிரைவேட் பங்ஷன் குறித்த படத்தைப் போட்டுள்ளேன். இதற்கு உடைகள் இடையூறாக இருக்கிறது என்பதால் அதை முழுமையாக தூக்கிப் போட்டு விட்டேன் என்றும் தனது ஆபாசப் படத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷெர்லின்.

தனது சுய இன்பப் படத்தால் யாரும் கோபப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள ஷெர்லின், உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் இது. இது ஒரு சாதாரண ஆபாசப் படம்தான். இது பிடிக்காவிட்டால் தயவு செய்து யாரும் பின்பற்ற வேண்டாம், பிடித்திருந்தால் கடைப்பிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Comments