கார்த்தி படத்தில் சினேகாவுக்கு வாய்ப்பா? வெங்கட் பிரபு பதில்!!!

Wednesday,29th of August 2012
சென்னை::கார்த்தி படத்தில் சினேகாவுக்கு வாய்ப்பு தருவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜீத் நடித்த ‘மங்காத்தா படத்தையடுத்து கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி என்ற படத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு. இப்படத்தில் பிரசன்னா, சினேகா ஜோடியும் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி வெங்கட்பிரபு கூறியதாவது: கார்த்தி தற்போது Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். அதை முடித்துவிட்டு ÔபிரியாணிÕ ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார். இப்படத்தில் பிரசன்னா முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். சினேகாவும் நடிக்கிறாரா என்று கேட்கிறார்கள். அவரை நடிக்க வைப்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கதாநாயகி யார்? மற்ற நட்சத்திரங்கள் பற்றியும் விரைவில் முடிவு செய்ய உள்ளேன். பிரியாணி படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். 2 பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டார். அடுத்த பாடலுக்கு இசை அமைக்கும் பணியில் இருக்கிறார். படத்தின் முதல் பாடலை வாலியை எழுத கேட்டுக்கொண்டேன். மற்ற பாடல்களை வாலியுடன் கங்கை அமரனும் எழுதுகிறார்.

Comments