11 கிலோ உடை அணிந்து 'முகமூடி' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: நடிகர் ஜீவா!!!

Friday,31st of August 2012
சென்னை::ஜீவாவின் ‘முகமூடி’ படம் நாளை ரிலீசாகிறது. இதில் சூப்பர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். மிஸ்கின் இயக்கியுள்ளார். ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறியதாவது:-

‘முகமூடி’ குழந்தைகள் முதல் எல்லோரும் ரசிக்கும் படமாக வந்துள்ளது. இதில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். சிலிகான் மற்றும் ரப்பரில் செய்யப்பட்ட 11 கிலோ ஆடையை அணிந்து நடித்தேன். தினமும் அதை சுமந்து நடிப்பது சிரமமாக இருந்தது.

காரைக்காலில் 20 மாடி உயரத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. தினமும் அதில் ஏறி நடித்தது பயங்கர அனுபவமாக இருந்தது. படம் சிறப்பாக வந்துள்ளது. ஹாலிவுட் படம் போல் இல்லாமல் தென்னிந்திய சாயலில் எடுத்துள்ளோம்.

மிஸ்கின் முரட்டுத்தன சுபாவம் உள்ளவர் என்பது உண்மையல்ல. அவர் ஜாலியாக பழகக்கூடியவர் என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

‘டேவிட்’ படத்தில் நடித்து முடித்து விட்டேன். ‘நண்பன்’, ‘கோ’ போல் பல ஹீரோக்கள் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயங்க மாட்டேன். நல்ல கதை என்றால் புது இயக்குனர் படங்களிலும் நடிப்பேன்.

மணிரத்னம், வெற்றிமாறன் இயக்கும் படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. கவுதம்மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் சிறுவயது கேரக்டரிலும் மாணவன், இளைஞரனாகவும் தோற்றத்தை மாற்றி நடித்துள்ளேன். இளையராஜா இசையில் டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது.

இவ்வாறு ஜீவா கூறினார்.

Comments