த்ரிஷா வேடத்தை பறித்தார் சமந்தா!!!

Wednesday,4th of July 2012
சென்னை::த்ரிஷாவின் வேடத்தை பறித்தார் சமந்தா. மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் என டாப் ரேஞ்ச் இயக்குனர்கள் படங்களில் மளமளவென ஒப்பந்தம் ஆகி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டார் சமந்தா. இந்நிலையில் மணிரத்னம், ஷங்கர் படங்களில் இருந்து திடீரென்று அவர் விலகினார். கால்ஷீட் பிரச்னை, ஜோடி பொருத் தம் இல்லை, சரும பிரச்னை என்று காரணங்கள் கூறப்பட்டது. இதற்கிடையில் சமந்தா தோல் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக வெயில் மற்றும் அதிகமான வெளிச்சத்தில் நிற்ககூடாது என்று டாக்டர் அறிவுரை வழங்கி உள்ளார். இதையடுத்து சமந்தா வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ‘ரவுடி ரத்தோர்Õ இந்தி படத்தை இயக்கிய பிரபு தேவா அடுத்து ‘நமக்’ என்ற இந்தி படம் இயக்குவதற்கான பணியில் பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் இயக்கி வெற்றி பெற்ற ‘நு ஒஸ்தானன்டே நேனு ஒத்தன்டானாÕ என்ற படத்தையும் இந்தியில் ரீமேக் செய்கிறார். தெலுங்கில் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்தியில் த்ரிஷா வேடத்தை சமந்தா ஏற்கிறார். இதற்காக அவரிடம் பிரபு தேவா பேசி வருகிறார். சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் சமந்தா இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங்கில் பங்கேற்பதாக பிரபு தேவாவிடம் தெரிவித்துள்ளாராம்.

Comments