அஞ்சலிக்கு வந்த சோதனை! முத்தம் கொடுக்க சம்மதித்தார்!!!

Thursday,5th of July 2012
சென்னை::தமிழ் சினிமாவில் தனது மார்கெட்டை கொஞ்சம் ஹாட்டாக வளர்த்துக் கொண்டு வருகிறார் நடிகை அஞ்சலி. தெலுங்கு மலையாளம் மொழிகளில் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் கவர்ச்சியாக நடித்துவந்தாலும், தமிழ் படங்களில் தாவணியும், சுடிதாரும் தான் அஞ்சலியின் காஸ்டியூம்களாக இருந்துவந்தன.

ஆனால் அஞ்சலி கருங்காலி என்ற படத்திலேயே தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது பலருக்கு தெரியாது, அந்த படம் ரிலீஸானதைப் போல. சமீபத்தில் அஞ்சலி நடித்து வெளியான கலகலப்பு படத்தில் அஞ்சலி போட்ட கவர்ச்சிக் குத்தாட்டத்தின் மூலம் அஞ்சலியின் கவர்ச்சியான நடிப்பை அறிந்த ரசிகர்கள் அதை ரசிக்க துவங்கிவிட்டனர்.

அனைத்து கேரக்டரிலும் நடிக்கத் துவங்கிய அஞ்சலிக்கு வந்தது தான் மிகப்பெரிய சோதனை. ஆர்யா, சந்தானம், ஹன்ஸிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் சேட்டை படத்தில் அஞ்சலியும் நடிக்கிறார். ‘டெல்லி பெல்லி’ என்ற இந்தி படத்தின் ரீமேக் தான் சேட்டை படம். இந்த படத்தின் இயக்குனர் படுக்கையறைக் காட்சி, லிப் டூ லிப் முத்தக்காட்சி ஆகிய இரண்டில் ஒன்றை படத்தில் வைக்க விருப்பப்பட்டு, இந்த இரண்டில் நீ எதில் நடிக்கிறாய் என்று நீயே முடிவு செய்து கொள்ளம்மா என்று கூறிவிட்டார்.

நீண்ட யோசனையின் பின் அஞ்சலி முத்தக்காட்சியில் நடிப்பதாக கூறியிருக்கிறார். முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி அளித்த பேட்டியில் அஞ்சலி “ படுக்கையறை காட்சியா?முத்தக்காட்சியா? என இயக்குனர் கேட்டார்.

படுக்கையறை காட்சியில் நடித்து என் பெயரை கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் முத்தக்காட்சிக்கு ஓகே சொல்லிவிட்டேன். இந்த முத்தக்காட்சி குஷி படத்தில் விஜய்-ஜோதிகா நடித்த முத்தக்காட்சியை போன்று முக்கியமானது.

அதுமட்டுமில்லாமல் ஆர்யா எனது நல்ல நண்பர். அவருடன் அந்த காட்சியில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முத்தம் கொடுப்பது என்ன அவ்வளவு பெரிய தப்பா? “ என பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைப் போல கேட்கிறார் நடிகை அஞ்சலி.

Comments