படுக்கை அறை காட்சியில் நடித்தது கணவருக்கு பிடிக்கவில்லை : ரீமாசென் பரபரப்பு பேட்டி!!!

Friday, 13th of July 2012
சென்னை::இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர்Õ படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்தது சந்தோஷம். இப்படத்தின் வெற்றிக்கு படத்தில் பணியாற்றிய அனைவருமே தகுதியானவர்கள். எல்லோருக்கும் எல்லா திறமையும் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தகுந்த இடம் கிடைப்பதில்லை. அத்தகைய வாய்ப்பை அனுராக் ஏற்படுத்தி தருகிறார். Ôவசேபூர்Õ படத்தில் துர்கா என்ற பாத்திரத்தில் நடித்தேன். இந்த வேடத்தில் நடிக்க என்னை தவிர வேறுயாரையும் தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றார் அனுராக். திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல வாய்ப்புகளாக கிடைக்கிறது. வசேபூர் படத்தில் துணிச்சலாக படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறேன். இப்படத்தை என் கணவர் பார்த்தார். அந்த காட்சி அவர் மனதை கனமாக்கி இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளை அவர் விரும்பவில்லை என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதை அவர் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை.
இவ்வாறு ரீமா சென் கூறினார்.

Comments