ரூ.90ஆயிரத்தில் அஜீத் கட்அவுட்டுக்கு மாலை!!!

Saturday, 14th of July 2012
சென்னை::ரசிகர் மன்றங்கள் வேண்டாம், ரசிகர்கள் வேண்டாம், பால் அபிஷேகம் வேண்டாம் என்று அஜீத் சொன்னாலும், அவரது ரசிகர்கள் அவர்கள் வேலையை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புகளோடு (ஜூலை 13) வெளியாகியிருக்கும் 'பில்லா 2' படத்திற்காக சென்னையில் உள்ள பல திரையரங்குகளிலும் அதிகாலை 4 மணி முதல் கூடிய அஜீத் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என்று கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும், பெங்களூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஒரு அஜீத் ரசிகர்கள் குழு சென்னை, ஆல்பர்ட் திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்திருக்கிறார்கள். இவர்கள் அஜீத் கட்அவுட்டுக்கு பிரமாண்டமான ஒரு மலர் மாலையையும் பெங்களூரில் இருந்து இரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ரூ.90ஆயிரம் மதிப்புள்ள இந்த மாலையை மூன்று நாட்களாக உருவாக்கியுள்ள இவர்களுக்கு இது ரொம்ப சாதரண விஷயமாம். அஜீத்திற்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்வார்களாம்.

நீங்க இப்படி இருக்கீங்க...ஆனா, உங்க தல வெளியிலயே தல காட்டமாட்ராரே...

Comments