சன்னி லியோன் வெட்கப்பட்டார் - மகேஷ் பட்டின் காமெடி!!!

Thursday,14th of June 2012
சென்னை::நீலப் படத்தில் நடிப்பவர் சன்னி லியோன். அவரை தனது ஜிஸிம் 2 படத்தில் நடிக்க பாலிவுட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் மகேஷ் பட்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருந்தால்கூட இப்படியொரு விளம்பரமும் வரவேற்பும் கிடைத்திருக்காது.

நீலப் படத்தில் அம்மணமாக நடிக்கும் அம்மணியைப் போட்டிப் போட்டு கவர் செய்கின்றன மீடியாக்கள்.

சன்னி லியோனும் அன்னை தெரசா ரேஞ்சுக்கு தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்த கேவலத்தை பார்த்த எழுத்தாளர் தஸ்லிமா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சன்னி லியோனுக்கு இப்படியொரு வரவேற்பு அளிக்கப்பட்டால் உங்கள் குழந்தைகளும் அவரைப் போலதான் ஆக ஆசைப்படும் என்ற தஸ்லிமாவின் குற்றச்சாற்று கவனிக்கப்பட வேண்டியது.

சமீபத்தில் இலங்கையில் எடுத்த படத்தின் பிகினி காட்சிகளை சன்னி லியோன் மீடியாவுக்கு அளித்தார். அதையொட்டி மகேஷ் பட் சொன்ன கமெண்ட்தான் மிகப்பெரிய காமெடி.

ரன்தீப் ஹுடாவுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது சன்னி லியோன் ரொம்பவே வெட்கப்பட்டாராம்.

ஒருவேளை துணி இடைஞ்சலாக இருந்ததால் இருக்குமோ?

Comments