பாலா போட்ட போட்டில் ஓடிப் போன 'பவர் ஸ்டார்' சீனிவாசன்!!!

Wednesday,13th of June 2012
சென்னை::எப்பவுமே டென்ஷனாக இருக்கும் இயக்குநர் பாலாவை எக்குத்தப்பாக டென்ஷனாக்கி கொந்தளிக்க வைத்து விட்டாராம் நமது 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.!

அதர்வாவை நாயகனாக வைத்து பரதேசி என்ற படத்தை சிரத்தையாக இயக்கி வருகிறார் பாலா. கூலித் தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை இது. மிகவும் சீரியஸான கதை என்பதால் படப்பிடிப்புத் தளமே படு கவனமாக செயல்பட்டு வருகிறதாம்.

வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை, நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். பாலாவும் சீர்தூக்கிப் பார்த்ததில், அதேதான் ... என்று பிக்ஸாகி பவர் ஸ்டாரை கூப்பிட்டு புக் செய்துள்ளார்.

சும்மாவே பஞ்சாக பறக்கும் பவர் ஸ்டார், பாலாவே கூப்பிட்டுவிட்டார் என்பதால் தரையிலிருந்து பத்தடிக்கு மேலேதான் மிதந்தபடி இருக்கிறாராம். சமீபத்தில் படப்பிடிப்புக்குப் போயுள்ளார். வழக்கமாக அவருடன் அடிப்பொடி, அடியடிப்பொடி என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக போவதுதான் வழக்கம். அண்ணன் சிங்கம்ல, கூடமாட ஒத்தைக்கு போகனும்ல...

அதேபோல பாலா படத்துக்கும் பக்கவாக போய் இறங்கியுள்ளது பவர் ஸ்டார் கேங். இதைப் பார்த்த பாலா டென்ஷனாகி விட்டாராம். சிலசமயங்களில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் திட்ட மாட்டார் பாலா. அவர்களுக்கு உறைப்பது போல வேற யாரையாவது திட்டி தீர்த்து விடுவார். அதே ட்ரீட்மென்ட்தான் பவர் ஸ்டாருக்கும் கிடைத்ததாம்.

பாலா கோபத்தைப் பார்த்த பவர் ஸ்டார், பங்சராகிப் போய் உடனே தனது கேங்கோடு எஸ் ஆகி விட்டாராம் அந்த இடத்தை விட்டே.

மறுபடியும் பவர் வருவாரா, 'இவர்' வர விடுவாரா என்பது அந்த சாமிக்கே வெளிச்சம் என்கிறார்கள்...!

Comments