Tuesday, 26th of June 2012சென்னை::ஹீரோக்களுக்கு இணையாக காமெடியன்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். அனைவரின் குறியும் தனது மகன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே.
சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக இரண்டுப் படங்கள் முடித்துவிட்டார். மயில்சாமியின் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வடிவேலு தனது மகனை ஹீரோவாக்க கடும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கருணாஸ் தனது மகன் கெவினை காமெடியனாக களமிறக்கியிருக்கிறார்.
கருணாஸ் நடிக்கும் ரகளைபுரத்தில் கோவை சரளாவுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறாராம் கெவின். காமெடி நன்றாக வொர்க் அவுட்டாவதால் மகன் ஹீரோவாகும் காலம் வரை காமெடியனாக நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் கருணாஸ்.
ரகளைபுரத்தில் கருணாஸ்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment