Wednesday,20th of June 2012சென்னை::அஜீத் நடிக்க மறுத்த வேடத்தில் சூர்யா நடிக்கிறார். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தார். அந்த படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் இருவரும் சேர்ந்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் பணிபுரிய இருந்தனர். கதை உருவான பின், திடீரென அப்படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் அஜீத். இந்நிலையில் அந்த கதையை சூர்யாவுக்கு கூறியிருந்தார் கவுதம். சிங்கம் 2வில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்ததும் துப்பறியும் ஆனந்த் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இது பற்றி சூர்யா கூறுகையில், கவுதமும் நானும் இணைந்தால் அந்த படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கும். காதல், மெலடி இசையை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட¢ட ஒரு படமாக துப்பறியும் ஆனந்த்Õ இருக்கும். காரணம், இது த்ரில்லர் கதை மட்டுமல்ல. பீரியட¢ படமாக உருவாக உள்ளது என்றார். எனது இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிப்பது சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றார்.
Comments
Post a Comment