சில்க் வேடத்தில் நடிக்க நடிகைகளுக்கு துணிச்சல் இல்லை - சனா கான்!!!

Sunday 3rd of June 2012
சில்க் வேடத்தில் நடிக்க பல ஹீரோயின்களுக்கு துணிச்சல் இல்லை. அந்த வேடத்தை ஏற்க துணிச்சலாக ஒப்புக்கொண்டிருக்கிறார் சனா கான் என்றார் இயக்குனர் அனில்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி டர்ட்டி பிக்சர்Õ என்ற படம் இந்தியில் உருவாகி வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னட திரையுலகில் சில்க் கதையை படமாக்கும் முயற்சியில் இயக்குனர்கள் குதித்துள்ளனர். மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர் ஆன்டனி ஈஸ்ட்மேன். இவரே சில்க் படத்தின் கதையை எழுதுகிறார். ‘புரபைல்Õ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை அனில் இயக்குகிறார். சில்க் வேடத்தில் ரிச்சா கங்கோபாத்யாவை நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார். அவரைத் தொடர்ந்து சார்மி நடிப்பார் என்று தகவல் வெளியானது. இறுதியாக இப்படத்தில் சனா கான் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவர் ‘சிலம்பாட்டம்Õ படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர்.
இதுபற்றி அனில் கூறியதாவது:
Ôபுரபைல்Õ படம் எந்த விதத்திலும் Ôதி டர்ட்டி பிக்சர்Õ படத்தை ஒத்திருக்காது. இந்தியில் வித்யா பாலன் நடித்த அதேவேடத்தை இப்படத்தில் சனா கான் ஏற்கவில்லை. சில்க் வேடத்தில் நடித்த பிறகுதான் வித்யாபாலன் டாப் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். அந்த துணிச்சல் சில ஹீரோயின்களுக்கு இல்லை. இதன்பிறகுதான் சில்க் வேடத்தை ஏற்று நடிக்கக்கூடிய துணிச்சலான நடிகையை தேடினோம். சனா கான் பொருத்தமாக இருந்தார். சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரது துணிச்சலை நேரில் பார்த்திருக்கிறேன். ஆன்டனி ஈஸ்ட்மேன் சில்க்குடன் நீண்டநாட்கள் தொடர்பில் இருந்தவர். அவர்தான் இப்படத்தின் கதை எழுதுகிறார். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இவ்வாறு அனில் கூறினார்.

Comments