விஜய் ஆன்டனியின் மூன்றாவது முகம்!விஜய் ஆன்டனி.படத்தில் சில இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு!!!

Monday, June, ,04, 2012
ஒவ்வொரு மனிதனுக்குமே, வீட்டிற்குள் ஒரு முகம், வெளியில் இன்னொரு முகம் உண்டு. ஆனால், வீட்டில் இருப்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்கும் தெரியாத ஒரு புதிய முகம் உண்டு. அந்த மூன்றாவது முகம் பற்றிய கதை தான், நான் நாயகனாக நடித்து வரும், "நான் படத்தின் கதை என்கிறார், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி."இப்படத்தில் சில இலங்கை தமிழர்களுக்கும், நீங்கள் வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே? என கேட்டபோது, "பாடலாசிரியர் அஸ்மின், டிசைனர் தினேஷ், பாடகர் கிரிஷான் மகேசன் ஆகிய மூன்று இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பளித்துள்ளேன். சிறந்த பாடலாசிரியருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, இணையதளம் மூலம் வைத்த போட்டியில் சிறப்பாக பாடல் எழுதி முதல் இடம் பெற்றவர், பாடலாசிரியர் அஸ்மின், என்றார் விஜய் ஆன்டனி.

Comments