நடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்!!!

Saturday, 16th of June 2012
சென்னை::திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சாயாசிங் இன்று பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணம் செய்து கொண்டிருப்பவரும் ஒரு நடிகர்தான். சாயாசிங் கடைசியாக தமிழில் நடித்த அனந்தபுரத்து வீடு படத்தில் வில்லனாக வரும் கிருஷ்ணாதான் சாயாசிங்கின் கதாநாயகன் ஆகியுள்ளார். அதாவது கணவராகியுள்ளார்.

அனந்தபுரத்து வீடு படத்தில் நடிக்கும் போது கிருஷ்ணாவுக்கும், சாயாசிங்குக்கும் மலர்ந்த காதல் இன்று இவர்களது காதல் பெற்றோரது சம்மதத்துடன் திருமணத்தில் நிறைவு பெற்றுள்ளது

சென்னையில் நடைபெற்ற கிருஷ்ணா-சாயாசிங் திருமணம் நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு திருமண ஜோடியை வாழ்த்தினார்கள்.

அனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது சாயா சிங்குக்கும், அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்தது. ஈரம், இதயத் திருடன் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணா.

இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமண உறவாக மலந்துள்ளது.

சாயா சிங் - கிருஷ்ணா திருமணம் இருவரது பெற்றோர் சம்மதத்துடனும் சென்னையில் நடந்தது.

Comments