கண்ணதாசன் மனைவி மரணம்

Thursday,May,31,2012
மறைந்த கவியரசு கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாள் ஆச்சி (வயது 79). இவர் தன் குடும்பத்தோடு கோடம்பாக்கத்தில் (ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் அருகே) சுப்பராயன் நகரில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலிவுற்ற இவர் நேற்று காலை 11 மணியளவில் திடீர் மரணம் அடைந்தார். இவருக்கு கண்மணி சுப்பு, கலைவாணன் கண்ணதாசன், கண்ணதாசன் ராமசாமி, வெங்கடாசலம் என்ற நான்கு மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேன்மொழி காத்தப்பன், விசாலாட்சி பழனியப்பன் ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

(இதில் கலைவாணன் கண்ணதாசன் ஏற்கனவே காலமாகிவிட்டார்). இவரின் உடல் தகனம் நாளை போரூரில் உள்ள மின் மயானத்தில் நடக்கிறது.ஏராளமான திரையுலகினர் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Comments