இளையராஜாவின் புத்தகங்கள் வெளியீடு!!!

Tuesday, ,May, 22, 2012
இசை என்றல்ல... கவிதை, பாடல்கள், எழுத்து, புகைப்படம் என பல கலைகளில் ஜீனியஸ் நம்ம இசைஞானி!

இவர் எடுத்துள்ள ஓவியங்களை வைத்து இன்னும் கூட சில கண்காட்சிகள் நடத்தலாம்.

ராஜா எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. ஒவ்வொரு புத்தகமுமே ரசிகர்கள் பொக்கிஷமாய் மதிக்கிறார்கள். கவிஞர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றவை இந்தப் பத்தகங்கள் என்பது ராஜாவின் எழுத்தாளுமைக்குச் சான்று.

வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்குது, பால் நிலாப் பாதை, ஞான கங்கா...போன்றவை வாசிப்பு சுவாரஸ்யம் மிக்கவை!

இப்போது இசைஞானி மீண்டும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இவை மூன்றும் வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகின்றன.

ராஜாவின் ஹிட் பாடல்களை லட்சுமண் ஸ்ருதி இசைக் குழுவினர் வாசிக்க, தமிழ் சினிமா உலகமே திரண்டு வந்து அந்த இசைமழையில் நனையவிருக்கிறார்கள்.

Comments